அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று (ஜூலை 25ஆம் தேதி) சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து குறைகேட்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் நடைபெற இருக்கும் இதில் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை கேட்டு பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஏதேனும் புகார் இருந்தால் மின்னஞ்சல் மூலமாகவோ தபால் மூலமாகவோ 9786254257 என்ற whatsapp எண் மூலமாக புகாரை எழுதி ஜூலை 10ஆம் தேதிக்குள் அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் தேதிக்கு பிறகு அனுப்பப்படும் எந்த பிரச்சினைகளும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.