தமிழ்நாட்டில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் பேருந்துகள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக 1200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதன் காரணமாக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.