வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாநிலத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 16-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 18-ஆம் தேதி வரை நீடிக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.