
சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் காவல்துறை குறுஞ்செய்தி போன்று போலியான லிங்க் அனுப்பி 12,600 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த குறுஞ்செய்தியை ஒரு தம்பதியினர் கிளிக் செய்தனர்.
உடனே அவர்களது செல்போன் ஹேங் ஆகி ஸ்விட்ச் ஆஃப் ஆகியது. இதனால் பதறிப்போன தம்பதியினர் சிறிது நேரத்திற்கு பிறகு செல்போனை ஆன் செய்து பார்த்தனர். அப்போது அவர்களது வங்கி கணக்கில் இருந்து 12,600 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தம்பதியினர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.