
கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று நாகலட்சுமி ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது பெட்ரோல் போடுவதற்காக சீட்டை திறந்த போது பச்சை நிறத்தில் பாம்பு இருந்ததை கண்டு நாகலட்சுமி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வருவதற்குள் பாம்பு வெளியே வந்து அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்பித்து சென்றது. நாகலட்சுமி வீட்டிற்கு அருகே ஒரு தோட்டம் உள்ளது.
அங்கிருந்து வந்த பாம்பு ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே மழைக்காலங்களில் வீட்டிற்கு அருகில் தோட்டம் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.