
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.