
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.