சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க பயோமெட்ரிக் முறை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை சரி பார்க்கவும், மோசடியை தடுக்கும் விதமாகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை கியாஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வந்தனர். ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சிலிண்டர் ஊழியர்கள் தற்போது வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளர்கள் தங்களது பயோ மெட்ரிக் தகவல்களை சரியாக பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் நிறுத்தப்படும் என செய்திகள் தற்போது வெளியாகிறது. இதனால் பலரும் கியாஸ் நிறுவனங்களுக்கு சென்று பயோமெட்ரிக் விபரங்களை சரிபார்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக கியாஸ்  ஏஜென்சிகள் முகாம்களும் நடத்தி வருகிறது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் கியாஸ் நிறுவனங்களுக்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் கார்டு மூலமாக பதிவு செய்யப்பட்ட பின்னர் கருவிழி போட்டோ எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். சமையல் எரிவாயு மானியங்கள் தகுதி இல்லாத நபர்களுக்கு செல்வதை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.