இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை வங்கிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படாத கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அல்லாத கட்டணங்களை விதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்காலர்ஷிப் பணம் பெறுவதற்காகவோ அல்லது நேரடி பணப் பரிமாற்றத்திற்காகவோ எடுக்கப்பட்ட கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாவிட்டாலும் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.