ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்  சென்னை அணிக்கு திரும்புகிறார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண். இவரை ரூ.2.4 கோடிக்கு சிஎஸ்கே  ஏலம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சி. சிஎஸ்கே வீரராக சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நான் விளையாடியதில்லை. ருத்து தலைமையின் கீழ் சென்னையில் விளையாட உற்சாகத்துடன் காத்திருக்கிறேன் என சாம் கரண் கூறியுள்ளார்.