மகா சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனைத்து விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுங்கள் என்று அம்பிகை வேண்டி கொண்டாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார்.

அந்த இரவு தான் சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இன்று இரவு நான்கு ஜென்மங்களிலும் தூங்காமல் பூஜை செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி இன்று இரவு குலதெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு சிவனை வழிபட்ட நேரடி பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.