மகளிர் உரிமை தொகையை இனி 1ம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10ம் தேதி வழங்கப்பட்டது.

ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 1,000 வழங்கப்படும் நிலையில், மாதந்தோறும் 14, 15ம் தேதிகளில் அந்த தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல், 1ம் தேதியே பயனாளிகளின் வங்கி கணக்கில் 1,000 செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.