மகர ராசி அன்பர்களே,

இன்று குழப்பங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள். இன்று வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். தாய் வழி உறவுகளால் நல்லது நடக்கும். முன்பின் தெரியாமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சு வார்த்தைகளை தவிர்த்து விடுவது நல்லது. எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இன்று மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். இன்று பெண்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சமையலின் போது கவனமாக இருங்கள்.

இஷ்ட தெய்வத்தின் அருள் உங்களுக்கு துணையாக உள்ளது. இன்று மாணவர்கள் சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கல்வியில் மட்டுமே அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்