மகரம் ராசி அன்பர்களே,

கண்டிப்பாக இன்று மன அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நிதானமாக எதிலும் ஈடுபட வேண்டும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். நேரம் காலம் பார்த்து எதிலும் ஈடுபடுங்கள். நிதானமாக எந்த செயலிலும் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். கனவுகள் நினைவாகும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயணத்தின் போது கவனமாக இருங்கள். கூடுதல் உழைப்பால் பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பெண்கள் இன்று வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அற்புதமாக காய் நகர்த்துவீர்கள். யோகமான நல்ல பலன் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் மதிப்பும் மரியாதையும் கூடிவிடும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். கல்வியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். உயர் கல்வி சிறப்பாக அமையும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்