
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வயதான ஒருவர், குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் மனமுடைந்து, தனது மனைவியை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்து, பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம், திருப்பூரை அடுத்த வெள்ளக்கோவில் அருகே நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகே உள்ள கருப்பணகவுண்டன்புதூரைச் சேர்ந்த வேலுசாமி (வயது 70), அவரது மனைவி சாமியாத்தாள் (59), மகள் அபிநயா (36), மகன் வித்யாசாகர் (34) ஆகியோர் உறவினர்கள் வீட்டான வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசில் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் அபிநயாவின் கணவர் தங்கவேல், சில ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சு வலியால் இறந்த நிலையில், அவருடன் இருந்த வீட்டில் இவர்கள் விவசாயத்தை பார்த்து வந்துள்ளனர்.
சமீபத்தில் வித்யாசாகருக்கு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைத்த பின்னர், குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து சில சச்சரவுகள் காரணமாக மகன், மகள், மனைவி ஆகியோா் வேலுசாமியை அவமதிப்பு செய்ததாகத் கூறப்படுகிறது. இது காரணமாகவே, வேலுசாமி, தன் மனைவியிடம் ஏற்பட்ட கோபத்தில், புதன்கிழமை காலை அரிவாளால் தாக்கியதுடன், கல்லால் அடித்தும் கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரது வாயில் விஷ மாத்திரை வைத்தும், பின்னர் தானும் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் காரியத்தை கண்ட பக்கத்துவீட்டில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வெள்ளக்கோவில் போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறுபோதற்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.