
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓரங்கூரில் முத்துராஜ் (68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறி கதறி அழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முத்துராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.