விருதுநகர் மாவட்டத்திலுள்ள தெம்பக்குளம் கிராமத்தில் மோகன்ராஜ் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் சம்பவ நாளில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரிடம் குடிபோதையில் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

அதோடு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் மீதான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.