உத்திர பிரதேச மாநிலத்தில் லோகேந்திர யாதவ் என்ற கொலை குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீஸ் வேனில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் லோகேந்திர யாதவ் லைவ் வீடியோவில் தனது எதிரிகளை கடுமையாக பேசியுள்ளார்.

அந்த லைவில் காவல்துறையினர் வேனில் அமர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.