இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு பெண் கையில் கல்லை எடுத்து ஒரு காவலரைத் தாக்க முயற்சிக்கிறார். அந்த நேரத்தில், மற்றொரு காவலர் விரைந்து வந்து அவரது கையில் இருந்த கல்லை தட்டிவிடுகிறார். கல் கீழே விழுந்தவுடன், அந்தப் பெண் தன் தலையில் கல் பட்டது போல் நடித்து, உடனே மயங்கி கீழே விழுந்துவிடுகிறார்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து, அவரது நடிப்புத் திறமையை பாராட்டி, “இவருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்” என்று வேடிக்கையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
