“காவல்துறை அதிகாரிகள் எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அவர்கள் சிரிக்கவே கூடாதா?” இந்த வழக்கு தொடர்பாக பேசுவதற்கு முன்பு அவர்கள் வேறு விஷயங்கள் பேசியிருக்கிறார்கள்.. என்று அவர்கள் விளக்கம் கொடுத்ததிருக்கிறார்கள், அவர்கள் என்று கோவை சூலூர் 10 வயது சிறுமி கொடூரக் கொலை வழக்கில், செய்தியாளர் சந்திப்பின் போது போலீஸார் சிரித்தது குறித்த சர்ச்சைக்கு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அளித்துள்ள அதிரடி பதில் தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை அதிகாரிகள் நடத்திய பிரஸ்மீட்டின் போது சாதாரணமாகச் சிரித்த வீடியோ வெளியாகி நெட்டிசன்களின் கடும் கோபத்தைத் தூண்டியது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய காரசாரமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, போலீஸார் எப்போதும் இறுக்கமாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

“>