தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய திட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கக்கூடாது. இதுதொடர்பான பதிவேட்டில் கடைசி அரசாணைக்கு கீழே கோடு வரைந்து, கையெழுத்திட்டு அதனை போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்த தேர்தலின்போது பின்பற்றிய நடைமுறைகளை தற்போதும் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.