
பீகார் மாநிலம் முசப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் போட்டி தேர்வு படித்து வருகிறார். நேற்று ஓம்பிரகாஷ் மதுபானி மாவட்டத்தில் இருந்து ரயிலில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கொள்ளையர்கள் பயணிகளின் உடைமைகளை திருட முயற்சி செய்துள்ளனர்.
உடனே ஓம் பிரகாஷ் அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கொள்ளையர்கள் ஓம் பிரகாஷை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் அவரது இரண்டு கால்களும் படுகாயம் அடைந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓம் பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.