உத்தர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் அகர்வால் என்ற இளைஞர் தீபாவளிக்கு முன்பு நாள் இன்னோவா கார் ஒன்றை பரிசாக பெற்றுள்ளார் இதனைக் கொண்டாட அதுலின் நண்பர்கள் பார்ட்டி வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அவ்வாறு அதுல் மற்றும் ஆறு நண்பர்கள் சேர்ந்து பார்ட்டி கொண்டாடிவிட்டு புதிய காரில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் வழியில் BMW கார் ஒன்றுடன் இவர்கள் காரை போட்டி போட்டு ஓட்டியுள்ளனர்.

அப்போது டேராடூன் பகுதியில் வைத்து எதிரிலே வந்த ட்ரக்கின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் மூன்று ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நொடியில் ஆறு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.