தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி வரை 6 மாதத்திற்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cecc.in என்ற இணையதளம் மூலமாக வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-25954905 , 044-28510537  ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.