தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. தமிழக அரசு தற்போது ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை அரசு போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் விரும்பி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சுமார் 372 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பயனாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு தொகை, பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.