பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற் கோவில் அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முன்பாக கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 2 பேர் காயமடைந்தனர். இன்று காலை சந்தேகத்தின்படி பொற்கோவில் அருகே ஒரு பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் விசாரித்தனர்.

இதையடுத்து குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேரை கைது செய்திருப்பதாக பஞ்சாப் காவல்துறைத் தலைவர் கெளரவ் யாதவ் தெரிவித்து உள்ளார். அதோடு இவர்கள் 5 பேரும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பட்டாசு தயாரிக்கும் பொருட்களை கொண்டு குண்டு வெடிப்பு நிகழ்த்தியுள்ளதாகவும் அம்மாநில டிஜிபி கூறியுள்ளார்.