
உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது.
இதனைத்தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. முதல் உ பாகத்தின் வரவேற்பால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் PS2 படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இப்படத்தின் முதல் பாகம் அதிகாலை 4 மணி முதலே காட்சிப் படுத்தப்பட்டன. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இதனை கண்காணிக்க வேண்டும் என்று வட்டாட்சியர்களுக்கு ஆட்சியர்கள் எழுத்துமொழி உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.