மணிரத்னம் டைரக்டில் உருவாகி இருக்கும் “பொன்னியின் செல்வன் 2” படம் நாளை (ஏப்.,28) உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. பொதுவாக எந்தவொரு பெரிய படம் ரிலீஸ் ஆனாலும் அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகளை ஆரம்பிப்பார்கள். இதையடுத்து காலை 8 மணிக்கும் மற்றொரு சிறப்புக் காட்சி நடக்கும். பொங்கலுக்கு வெளியாகிய துணிவு படத்திற்கு அதிகாலை காட்சிகளும், வாரிசு படத்திற்கு 8 மணி காட்சிகளும் நடைபெற்றது.

எனினும் அனுமதி பெறாமலேயே அக்காட்சிகளை நடத்தியதாக சர்ச்சை பெறப்பட்டது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் கண்டிப்பாக அதிகாலை, காலை சிறப்பு காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் அதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

அதோடு தமிழகத்தில் எந்தவொரு தியேட்டரில் ஆவது அனுமதியின்றி அதிகாலை காட்சிகளை நடத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத தந்துள்ளது. அதிகாலை, காலை சிறப்பு காட்சிகள் இல்லாததால் அது படத்தின் முதல் நாள் வசூலைக் குறைத்து விடும்.