ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் தனது கால்களை இருக்கையின் மீது வைத்து அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பொது இடங்களில் பயணிகளின் சுகாதாரம் மற்றும் ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அலட்சியமாக கால்களை நீட்டி அமர்ந்திருந்த அந்த நபரை, சக பயணிகள் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தனர்.
மேலும் “இது தவறு, பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது” என்று பயணிகள் அவரை எச்சரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் தற்போது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
This video was captured today in Hyderabad Metro during a morning office commute. A man was seen sitting awkwardly with his foot resting on the seat – a clear lack of civic sense and respect for public property. What is happening to people nowadays? pic.twitter.com/blwSlpNg2o
— Aparajite (@amshilparaghu) June 1, 2026
“>
இதனால் பொதுப் போக்குவரத்து என்பது அனைவருக்கும் பொதுவானது, அங்கு நாகரிகமாகவும் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமலும் நடந்து கொள்வது ஒவ்வொரு பயணியின் கடமையாகும். இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் அடிப்படை அறத்தையும் மீறுவதாக உள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், மெட்ரோ ரயில் போன்ற பொது இடங்களில் பயணிக்கும்போது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
