தமிழகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தில் பயனாளிகளுக்காக வழங்கப்பெற்ற பணத்துக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்குவழங்குவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் மற்றும் நேரடி வரிகள் வாரியத்திற்கும் உத்தரவிட்டு வழக்குகளை நீதிபதி முடித்து வைத்தார்.