தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வருவதால் அரசு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு தொகை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்.

மேலும் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட தொகுப்பும் வழங்கப்படும். தென் மாவட்டங்களில் பெய்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து விரைவில் ஆலோசித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.