இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.

எனவே  பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்புவதர்கு ஏதுவாக ஜனவரி 18ம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையில் கூடுதலாக ஒருநாள் விடுமுறை கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.