கர்நாடகா மாநில கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பூவரசன் – நந்தினி தம்பதி. நந்தினிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் குறை மாசத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மூன்று பெண்கள் தனி வார்டில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை கொஞ்சுவது போன்று தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அந்த பெண்கள் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் மூன்று பெண்களும் பையில் மறைத்து வைத்து குழந்தையை கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து கோலார் – தமிழக எல்லையில் குழந்தையுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் குழந்தையை மீட்டு அந்த பெண்களை கைது செய்துள்ளனர்.