தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது . பேருந்து போக்குவரத்து இன்று வழக்கம் போலவே இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் 21,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொமுச, ஐ என் டி யு சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்காத நிலையில் மற்ற சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.