இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இஎஸ்ஐ பேராயுருமான ‌எஸ்.ரா சற்குணம் கடந்த 22ஆம் தேதி உடல் நலக் குறைவினால் உயிரிழந்தார். இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் சென்னையில் ‌ காலமானார். இவருடைய உடல் அஞ்சலிக்காக சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டுள்ளது. என்னுடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று எஸ்ரா சற்குணம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அந்த சமயத்தில் சற்குணம் மகளிடம் தொலைபேசி மூலம் நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்ததோடு அவருக்கு ஆறுதல் கூறினார்.