கோவை ஆர்எஸ் புரத்தில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் மட்டுமே பேசுகிறார். இந்தியாவிலேயே மோடியே அலறும் விதத்தில் மோடியை எதிர்த்து தமிழ்நாட்டில் மட்டும்தான் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தால் பயப்படுவதாக சொல்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எட்டு முறை வந்தபோதிலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அமித்ஷா வந்து என்ன செய்யப் போகிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். மேலும் அதற்கான மக்கள் பணிகளில் திமுகவினர் தீவிரம் காட்ட வேண்டும் என கூறினார்.