திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு ட்ரை ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யக்கூடாது. இதனை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரித்து அதிகாரிகள், உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.