உத்தர் பிரதேஷ் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையான சாய்ரா தனது தாயுடன் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் விளையாடுவதற்காக தாத்தா பலூன் கொடுத்துள்ளார். பலூனை குழந்தை ஊதி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டது.

சாய்ராவின் தாய் சென்று பார்த்தபோது குழந்தை வாயில் நுரையுடன் மயங்கி கிடந்தார். இதையடுத்து சாய்ராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடித்த பலூனின் ஒரு துண்டு குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியது தான் மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடமாகும். குழந்தையின் கையில் விளையாட கொடுக்கும் பொருளின் ஆபத்தை அறிந்து கொடுப்பதுடன் குழந்தைகளை அருகில் இருந்து பார்த்துக் கொள்வது நல்லது.