
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பெங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்த தம்பதியினருக்கு கவின் குமார் தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கவின் குமார் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சமீப காலமாக போதைப்பொருள் பழக்கம் கொண்ட சக மாணவர்களுடன் கவின் குமார் பேசி புகையிலை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் குரு சாமியிடம் கூறியுள்ளார். மேலும் கவின்குமாரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அவரது நடவடிக்கை குறித்து கூறியுள்ளனர்.
பெற்றார் முன்னிலையில் கவின்குமார் இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் கவின் குமாரை வீட்டிற்கு அழைத்து சென்று அறிவுரை கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று குருசாமி வேலைக்கு சென்று விட்டார். ராஜலட்சுமி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது கவின்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு வந்த ஆதிலட்சுமி தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறி சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கவின்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் கவின்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.