
இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி வைத்து தாக்கியது. ஈரான் தயாரிக்கும் அணு ஆயுதங்களை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை நீக்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி முதற்கட்டமாக ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் பேருந்து மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து இண்டிகோ விமான மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. மாணவர்களை வரவேற்க அவர்களின் பெற்றோர் விமான நிலையத்தில் திரண்டனர். ஈரானிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.