
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வந்த நிலையில் இன்று ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக மக்கள் பற்றியும் தமிழ் கலாச்சாரம் குறித்தும் புகழ்ந்து பேசினார். பின்னர் முன்மொழி கல்வி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு மருத்துவமனை மற்றும் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே கூறிவிட்ட நிலையில் அதனை ஏன் இன்னும் செயல்படுத்தவில்லை என்றும் கேட்டார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் அமித்ஷா சொன்னது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது மத்திய அரசு ஒவ்வொரு மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அமித்ஷா சொன்னது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பெரிய மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டு போகலாம் என்றார். அதன்பிறகு மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித்ஷா சொன்னது பற்றி கேட்டனர். மேலும் அதற்கு அவர் சொல்வது ஈசி ஆனால் அதை செய்வது தான் கடினம் என்று திருக்குறளை மேற்கோள் காட்டி பதில் சொன்னார்.