அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல உத்தரவுகளை புதிதாக பிறப்பித்து வருகிறார். அந்த உத்தரவுகளில் முக்கியமான ஒன்றாக அமெரிக்காவில் வசிக்கும் அண்டை நாட்டுக்காரர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.

இங்கு அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. இதனால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியே வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மற்ற உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் டிரம்ப் தன்னுடைய முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் உறுதியாக இருந்து வருகிறார்.

மேலும் அமெரிக்க நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்க குடியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளிலே போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்த மோதல் கலவரமாக மாறியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். அதற்காக கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் புல்லட், துப்பாக்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கலவரத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் தொடர்பாக செய்திகள் சேகரிப்பதற்காக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அவர் அங்கு நடக்கும் கலவரம் பற்றி கேமரா முன்பு விலக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு போலீஸ்சார் அந்தப் பத்திரிகையாளர் மீது ரப்பர் புல்லட் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த பெண்ணின் காலில் ரப்பர் புல்லட் பாய்ந்தபோது வழியால் அலறிய அவர் பின்பு அங்கிருந்து விலகி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று கேமராவில் பதிவாகியுள்ளது‌. அதில் பெண்ணின் காலில் புல்லட் பாய்ந்த போது அலறிய அவர் அங்கிருந்து நகர்ந்து சென்று தனக்கு ஒன்றும் ஆகவில்லை என கூறியதும் வீடியோவில் பதிவாகியது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

இதுகுறித்து செய்தியாளர் பணிபுரியும் செய்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பெண் செய்தியாளரும் கேமரா மேனும் நலமாக உள்ளனர். அவர்கள் தங்களது பணியை தொடர்ந்து செய்வார்கள். போராட்ட களத்தில் செய்தியாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் வழக்கம் தான். முக்கிய தகவல்களை வழங்குவதில் செய்தியாளர்களுக்கு எவ்வளவு முக்கியமான பங்கு உள்ளது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது கூறியுள்ளனர்.