ஹரியானா மாநிலம் குருகுராமை சேர்ந்தவர் ரியா சர்மா. 32 வயதான இவருடைய பித்தப்பையில் இருந்து சுமார் 1500 கற்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துரித உணவுகளை தொடர்ந்து இவர் சாப்பிட்டு வந்ததால் அவருக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு சென்ற போது இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தினசரி ஒவ்வொரு வேளை உணவிற்கும் இடையே அதிக இடைவெளி எடுத்துக் கொள்வது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது போன்றவை பித்தப்பையில் கல் உருவாக காரணம் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.