தமிழில் ரட்சகன் எனும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்தான் சுஷ்மிதா சென். மேலும் இவர் இந்தியில் பிரபல நடிகையாக உள்ளார். இவருக்கு 47 வயது ஆகும் நிலையில், இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். எனினும் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவர் கூறினார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டது.

இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு  இதய அடைப்பை நீக்கி ஸ்டென்ட் வைத்து உள்ளனர். மேலும் சில காலம் வாழ்வதற்காக திரும்பி வந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் நேரலையில் சுஷ்மிதா பேசியதாவது “இளம் வயதினரையும் மாரடைப்பு விட்டு வைப்பதில்லை.  மாரடைப்பில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவது தான் எனக்கு பலனளித்துள்ளது. மாரடைப்பு பெண்களையும் தாக்கும். ஆகையால் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.