மைசூருவில் நடைபெறும் “Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற “Project Tiger”  நினைவு நாணயமும் வெளியிட உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “Project Tiger” திட்டம் 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்திய புலிகளின் கணக்கெடுப்பு தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த வகையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 1973 ஆம் ஆண்டு நாட்டில் 9 புலிகள் காப்பகம் இருந்த நிலையில், தற்போது 53 புலிகள் காப்பகங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.