
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் தரப்படுவது கிடையாது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக அவர்களுக்கு ரேஷன் அட்டை தரப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது
இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கிடைக்காததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து குடிமக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும். அரசுகள் இதில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.