TEN தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 677 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு விண்ணப்பதாரர்கள் நவம்பர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய். நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.mha.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.