புயல் பாதிப்பு காரணமாக இன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை மருத்துவத்துறையில் இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கான கணினி வழி தேர்வு நாளை நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவ சோதனை ஆய்வு கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கு இன்று தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி வாயிலாக தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்த மற்ற தேர்வுகள் ஒத்தி வைத்திருக்கக்கூடிய நிலையில் இந்த தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்படவில்லை என தேர்வர்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்வை ஒத்தி வைப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என தேர்தல் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் நேற்று தேர்வு மையத்தில் இருக்கக்கூடிய அதிகாரியிடம் கேட்கும் போது  எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் நிறைய தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். 2000க்கும் மேற்பட்டோர் எழுதக்கூடிய தேர்வு  நாளை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வர வேண்டும். இன்று காலைக்குள் செய்தி கிடைத்தால் அதற்கேற்றார் போல் தயாராவார்கள்.