தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் நான்காம் தேதி திங்கட்கிழமை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.