நிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்தது. பலரும் தங்களுடைய உடைமையை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள், இருசக்கர வாகனங்கள். கார்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவித்த மக்களுக்கு ஆறுதலாக, சென்னையில் வெள்ளத்தில் பழுதான வாகனங்களை இன்று முதல் டிச.18ஆம் தேதி வரை இலவசமாக பழுது பார்த்துக்கொள்ளலாம் என TVS நிறுவனம் அறிவித்துள்ளது. நீரில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்துவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.